மூன்று விவசாயிகளை கொன்ற “கல் ராஜா” யானை சிக்கியது.!

மூன்று பேரை தாக்கிக் கொன்ற ஒற்றை காட்டு யானை பிடிபட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனபகுதியில் இருந்து ஊருக்குள் வந்த ஒற்றை கல்ராஜா என்ற காட்டு யானை 15 நாட்களில் மூன்று விவசாயிகளை தாக்கி கொன்றது. இந்நிலையில் அந்த யானையை தீவிரமாக தேடி வந்த வனதுறையினர் இன்று காலை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

மேலும் யானையை அடர்ந்து வனப்பகுதிகுள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யானையை சத்தியமங்கலம் காட்டில் விடுவதாக கூறப்படுகிறது இதனால் மக்கள் நிம்மதியாக உள்ளார்கள். 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.