தமிழகத்தில் தான் அமைதியாக தேர்தல் நடக்கிறது – சத்யபிரதா சாகு

தமிழகத்தில் தான் அமைதியாக தேர்தல் நடக்கிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் வரவுள்ளதால், தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை மேற்கொண்டனர்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் அமைதியான முறையில் தேர்தல் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்