தேர்தலில் தோல்வி.! டிரம்பை விவாகரத்து செய்ய மெலனியா முடிவு..?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் டொனால்ட் டிரம்ப்பை தோற்கடித்தார். இருப்பினும், ட்ரம்ப் தனது தோல்வியை இன்னும் ஏற்கவில்லை. ஜோ பிடனின் வெற்றி பெற்ற  ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு தேர்தலில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார்.

இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றுள்ளேன், எனக்கு 7 கோடி 10 லட்சம் செல்லுபடியாகும் வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் டிரம்ப் கூறினார். இதற்கிடையில், மெலனியா தேர்தல் தோல்விக்குப் பின்னர் ட்ரம்பை விட்டு சென்றுவிடுவார் என்றுதகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலனியா டிரம்ப் விவகாரத்து செய்து விடுவார் என்று மெலனியா டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஸ்டீபனி வோல்கோஃப் கூறியுள்ளார். மேலும், டிரம்ப் – மெலானியாவின் மகன் போரனுக்கு சொத்தில் சமமான பங்கை வழங்க மெலனியா திருமணத்திற்கு பிந்தைய ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் என கூறியுள்ளார்.

 அமெரிக்காவின் ஜனாதிபதி இல்லமான வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கு தனி படுக்கையறைகள் இருப்பதாகவும் வோல்காஃப் குற்றம் சாட்டியுள்ளார்.  அதே நேரத்தில், டொனால்ட் டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஓமரோசா மணிகோல்ட் நியூமன் கூறுகையில், டிரம்ப் மற்றும் மெலனியாவின் 15 வருட திருமணம் இப்போது முடிந்துவிட்டது என்று கூறினார்.

டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்ததும் மெலனியா விவாகரத்து செய்வார் என்று ஒமரோசா கூறினார். ட்ரம்பை பழிவாங்க மெலனியா இப்போது ஒரு வழியைத் தேடுகிறார் என்று அவர் கூறினார்.

டிரம்ப் தனது இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸுடனான திருமண உறவை முறித்துக் கொண்ட ஒப்பந்தத்தின் படி, எந்த ஊடகங்களில் நேர்காணல் செய்யவோ அல்லது எந்த புத்தகங்களையும் வெளியிடவோ கூடாது என்று மார்லாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan