ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பார்வையாளர்களை நியமித்த தேர்தல் ஆணையம்.!

இடைத்தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு பார்வையாளர்ளை இந்திய தேர்தல் ஆணையம் இரு அதிகாரிகளை நியமித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளதால், பிரதான கட்சிகள் விறுவிறுவென தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அதே போல தேர்தல் அதிகாரிகளும் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு பார்வையாளர்ளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிக்கிம் மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் மற்றும், மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் ஆகியோர் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 27ஆம் தேதி வரை தேர்தல் பணியில் இருப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment