மும்பை நெடுஞ்சாலையில் பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா : பால்கர் மாவட்டத்தின் மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். கார் குஜராத்தில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள டிவைடரில் மோதியது.
இந்த மோதலுக்கு பிறகு தனக்கு எதிரே வந்த சொகுசு பேருந்தில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சொகுசு பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.