இந்தியாவில் ஒரே நாளில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா – உயிரிழப்பு தெரியுமா?

இந்தியாவில் லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு, நேற்று ஒரே நாளில் 8,782 கடந்த பாதிப்பு. 

உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 190,609 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,408 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 91,852 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். 

நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 8,782 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 223 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர்த்து மருத்துவமனையில் 93,349 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

author avatar
Rebekal