மீண்டும் நேபாளத்தில் நில நடுக்கம்.! இந்திய பகுதிகளிலும் நில அதிர்வு.! 

நேபாள நாட்டில் இன்று காலை 11.45 மணியளவில், இமயமலை பகுதி மாவட்டம் ஹால்ட்வாணி பகுதியில் இருந்து வடகிழக்கில் 39 கிமீ தூரத்தில் பஜாங்கில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நேபாளத்தின் தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது .

இந்திய நில அதிர்வு வானிலை ஆய்வு மையத்தின் ரிக்டர் அளவுகோலின்படி 5 என பதிவாகியுள்ளது . நேபாளத்தின் தேசிய நிலநடுக்க அளவீடு மற்றும் ஆராய்ச்சி மைய அளவீட்டின்படி 4.9 ரிக்டர் என பதிவாகியுள்ளது.

அதேபோல ஐரோப்பிய வானிலை ஆய்வு மையமும், இந்த நில அதிர்வை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் 5 முதல் 6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த நில அதிர்வானது இந்திய மாநிலம் உத்தரகாண்ட் பகுதியிலும், தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அக்டோபர் 3 (செய்வ்வாய்) பிற்பகல் 2:40 மணியளவில், பஜாங்கில் உள்ள டல்கோட்டில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் இன்றும் அதே இடத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

நேற்று, நேபாள பிரதமர் உத்தரவின் பெயரில், அரசின் உயர்மட்டக் குழுவானது அமைக்கப்பட்டு, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களைக் கண்காணித்து அதனை சரி செய்ய நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அந்தக்குழு சென்றுள்ளது. இன்னும் எவ்வளவு சேதம் என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.