மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!-ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு..!

இன்று மணிப்பூரில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. 

மணிப்பூரில் இன்று அதிகாலை 5.56 மணியளவில் உக்ருல் நகரின் தென்கிழக்கே 57 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக நிலஅதிர்வு தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் வெளியாகவில்லை.