ஆப்கன், பாகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம்…. தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்…

நம் அண்டை நாடுகளான ஆப்கன், பாகிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம்.
நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இருந்து வடகிழக்கே 237 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.33 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.  இந்த அளவு  ரிக்டர் அளவுகோலில்  4.2 ஆக பதிவாகி உள்ளது. இதேபோல்  பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த தகவலினை  தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
author avatar
kavitha