இ-பாஸ் முறை தமிழகத்தில் அவசியம் – முதலமைச்சர் பழனிசாமி

இ-பாஸ் முறை தமிழகத்தில் அவசியம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.இதனிடையே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  கடந்த நான்கு மாதங்களாக மக்கள் சிரமப்பட்டதாகவும், உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென  எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, இ -பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் முறையை தமிழக  முதல்வர் பழனிசாமி  அறிவித்தார்.

அண்மையில்  அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் எழுந்தினார்.அவரது கடிதத்தில்,  மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை.மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடைபடுகிறது. பயணத்துக்கென தனியாக அனுமதி, ஒப்புதல், இ-பாஸ் போன்றவை கூடாது.மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.புதுச்சேரி உள்ளிட்ட மாநிங்களில் இ -பாஸ் முறை ரத்து செய்யப்பட்டநிலையில் தமிழகத்தில் இன்னும் ரத்து செய்யப்படவில்லை.இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.