நாம் அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை உண்கிறோம். அனைத்து பழங்களும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆரோக்கியத்தை அளிக்கிறது.
பழங்கள் நமது உடலில் உள்ள நோய்களை இயற்கையான முறையில் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்களை சாறாக குடிப்பதை விட மென்று சாப்பிடுவது நல்லது.
துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம், இனிப்பு சுவை உடையது. இதன் பழம் மட்டுமன்றி, இலைகளும் மருத்துவ குணம் கொண்டது.
துரியன் பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புசத்து, கார்போஹைட்ரேட், நார்சத்து, துத்தநாகம்,புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளது. வாழைப்பழத்தை விட 10 மடங்கு அதிகமான இரும்புசத்து இந்த பழத்தில் உள்ளது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மது, போதை போன்ற தீய பழக்கத்தால் உடல் வலுவிழந்தவர்களுக்கு இந்த பலம் நல்ல மருந்து.
பெண்களுக்கு ஏற்படும் கருப்பை பிரச்சனைகளுக்கு இந்த பழம் நல்ல மருந்தாக பயன்படுகிறது.
கருப்பை பலவீனம், கரு களைதல், இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள் துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால் கருப்பை பலப்படும்.
சிலருக்கு பசியுணர்வே இல்லாத நிலை காணப்படும். இதனால் பல நோய்கள் ஏற்பட கூடும். இந்த துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியை தூண்டி பசியை ஏற்படுத்தும்.
ஒற்றை தலைவலி வந்தால் நாம் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. ஒற்றை தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். இந்த பழத்தில் ஒற்றை தலைவலியை போக்க கூடிய ரிபோபிளேவின் சத்து அதிகமாக உள்ளது.
சிலர் மிகச் சிறிய வயதிலேயே மிகவும் வயது முதிந்தவர்கள் போல காணப்படுவார்கள். துரியன் பழம் முதுமை தோற்றத்தை தடுத்து, இளமை தோற்றத்தை பிரதிபலிக்க செய்கிறது.
இந்த பழத்தில் முதுமை தோற்றத்தை தடுக்க கூடிய வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக உள்ளது.
இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பழம் நல்ல தீர்வை அளிக்கிறது. இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…