Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து வாங்குகிறது இதன் காரணமாக கென்யாவின் தலைநகரமான நைரோபி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நைரோபியில் உள்ள ஒரு ‘மை மஹியூ’ கிராமத்திற்கு அடுத்துள்ள ஒரு டவுனில் அணை உடைந்து இந்த வெள்ளமானது ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதம் முதல் நிற்காமல் பெய்த கனமழையால் கென்யாவின் பழமையான அணையான ‘கிஜாப்’ அணை சேதமடைந்தது. இதன் விளைவால் அணையின் தடுப்பு சுவர் உடைந்து வெள்ளம் நிற்காமல் கரைபுரண்டு ஓடி அருகில் உள்ள கிராமங்களில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தது. மக்கள் சரியான நேரத்தில் தங்களது உயிர்களை காப்பற்றி கொள்ள மேடான இடம் நோக்கி விரைந்தனர்.
இருப்பினும், அங்கிருந்த வீடுகள் எல்லாம் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. மேலும், குடியிருப்புகள் எல்லாம் மூழ்கி போனதால் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும், ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால் அங்குள்ள இயல்பு நிலையும் தலைகீழாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து ஏற்பட்ட இந்த வெள்ளப்பாதிப்பால் நேற்றைய நாளில் 40 பேர் பலியானதாக கூறிய நிலையில் இன்றைய நாளில் கிட்டதட்ட 50 அல்லது 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் எனும் தகவல்கள் வெளி வந்துளளது. இதன் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், மாயமான பலரையும் அங்குள்ள மீட்பு பணி குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதோடு கனமழையின் தாக்கம் தாங்கமுடியாமல் உலகநாடுகளிடம் உதவி கேட்டு வருகின்றனர்.
சென்னை: ஈரானில் ஜூன் 28-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டின்…
சென்னை : சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் துரைசெந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள திரைப்படம் கருடன். இந்த…
சென்னை : ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு உலக நாடுகளின் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் ஈரானில் ஒரு…
சென்னை : தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 5 நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தொடர்…
சென்னை: திரவ நைட்ரஜன் கலந்த பானை சாப்பிட்ட 12 வயது சிறுமி வயிற்றில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் திரவ நைட்ரஜன் கலந்த பான்…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெறும் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா, அதை பற்றி ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி தற்போது…