இரட்டை இலை சின்னம்: அதிமுகவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Edappadi Palanisami: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று அளித்த மனு மீது பதில் அளிக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Read More – புதிய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்த நிலையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சூரியமூர்த்தி மனு அளித்ததை தொடர்ந்து அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் கடந்த மாதம் 28-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

Read More – பாஜக கூட்டணியில் இணைந்தது அமமுக… டிடிவி தினகரன் அறிவிப்பு!

இந்த மனு விரைவில் விசாரணைக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக சூரியமூர்த்தி மனு மீது பதில் அளிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

 

 

Leave a Comment