அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா என அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட பல எதிர்ப்புகள் வந்ததை தொடர்ந்து, தனியார் நிறுவனம் மூலம் மின்வாரியத்துக்கு 30 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் ஆணை ரத்து என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர்களின் கட்டணத்தை சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று குப்பைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற உத்தரவை காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா என முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், மின் வாரியப் பணிகளை தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி. குப்பை கொட்டவும் வரி அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் வேலுமணி. அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா? எண்ணித்துணிக கருமம்! எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும், மின்துறை அமைச்சர் தங்கமணியும் ஊழல் செய்வதற்காக மின்வாரியத்தில் ஒவ்வொரு பகுதியாக தனியாருக்கு தாரை வாத்துவருகிறார்கள். மாநகராட்சி தேர்தலை நடத்தாமல் மக்கள் மீது சுமையை அடுக்கடுக்காக ஏற்றி கொண்டிருக்கிறார்கள். அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஊழல்களுக்கு தண்டனையாக சென்னை மக்கள் அபராதம் கட்ட வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…
IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…