ஊரடங்கு உத்தரவை மீறாதீர்கள்! பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல்!

இந்தியா முழுவதும் கொரானா பரவலின் தீவிரத்தை தடுப்பதற்காக இந்திய அரசு நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 பிரபல தமிழ் திரைப்பட நடிகரான ரியாஸ்கான், பனையூர் ஆதித்யாராம் நகர் 8-வது தெரிவில் தனது குடும்பத்துடன் வருகிறார். இவர் செவ்வாய்கிழமை இரவு தனது வீட்டில் இருந்துள்ளார்.  அப்போது அவரது வீட்டின் அருகே சுமார் 10 பேர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். 

இதனை பார்த்த ரியாஸ்கான், ஊரடங்கு அமலில் இருக்கும்போது கூட்டமாக நின்று பேசவேண்டாம் என கூறியுள்ளார். இதற்க்கு அவர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, ரியாஸ்கானை தாக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து, நடிகர் ரியாஸ்கான் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.