எல்.முருகன் பங்கேற்றதை அரசியலாக்க வேண்டாம் – தமிழிசை

மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தவே பல்கலைக்கழக விழாவில் எல் முருகன் பங்கேற்றார் என தமிழிசை தகவல்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகியிருந்தது நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டதை அரசியலாக்க வேண்டாம் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா  பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தவே மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழாவில் எல் முருகன் பங்கேற்றார். கல்வியை மேம்படுத்ததான் ஆளுநர்கள் முயற்சி செய்கிறார்கள். மத்திய அமைச்சர் முருகனை பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்தது மாணவர்களுக்கு வழிகாட்டுதலாகதான் இருக்கும் என்பதால்தான்.

பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து உழைத்து எல் முருகன் அமைச்சராக உள்ளார். அவரின் வளர்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதை அரசியலாக்க எடுத்துக் கொள்ளாமல், மத்திய, மாநில அரசை சார்ந்தோர் ஆளுநருடன் இணைந்து பட்டமளிப்பு விழாக்களை குழந்தைகளுக்கு வழிகாட்டு விழாக்களாகக் கொண்டு செல்லவேண்டும். இதில் அரசியல் ஏதும் இல்லை. தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் இதைக்கூற உரிமை இருக்கிறது என்று தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment