தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக்கூடாது – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

  • நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
  • தனிப்பட்ட முறையில் யாரையும் தவறாகப் பேசக்கூடாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்து நெல்லை மேலப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் மேடை பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். கூட்டத்தில் நெல்லை கண்ணன் பேசுகையில்,பிரதமர் மோடி மற்றும்  மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா ஆகியோர் குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்தது.இவரது பேச்சுக்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதனையடுத்து 3 பிரிவுகளின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,தனிப்பட்ட முறையில் யாரையும் தவறாகப் பேசக்கூடாது.அதேபோல் விமர்சனமும் செய்யக்கூடாது. கொள்கை ரீதியில் விமர்சனம் செய்யலாம் என்று நாராயணசாமி தெரிவித்தார்.