தேவையில்லாமல் பிரேக் எடுக்காதீர்கள், கோலி, ரோஹித்துக்கு கம்பிர் அறிவுரை.!

2023 ஒருநாள் உலககோப்பைக்கு கோலி, ரோஹித் விளையாட விரும்பினால் அடிக்கடி பிரேக் எடுக்காதீர்கள் என்று கம்பிர் கூறியுள்ளார்.

இந்திய அணி, கடந்த இன்னும் டி-20யிலோ ஒருநாள் போட்டியிலோ நிலையான ஒரு அணியாக இல்லை, இதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்களின் பங்களிப்பு அணிக்கு எப்போதும் தேவையான ஒன்றாக இருக்கிறது.

இந்தியாவில் நடக்கவிருக்கும் 2023 ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக்கோப்பையில் கோலி, ரோஹித் விளையாட விரும்பினால் தேவையின்றி பிரேக் எடுக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் கம்பிர் கூறியுள்ளார். இந்திய அணியாக நாம் நிறைய அடி வாங்கிவிட்டோம், எந்தவொரு பெரிய தொடரையும் நம்மால் வெல்ல முடியவில்லை.

உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் இந்தியா இன்னும் நிலையான ஒரு அணியாக உருவெடுக்கவில்லை, என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று கம்பிர் கூறினார். விராட் கோலி, மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இலங்கைக்கு எதிரான டி-20 தொடரில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment