Categories: Relationship

அன்னையர் தினம் உருவானது எப்படி தெரியுமா ?

இன்று நாம் அனைவரும் அன்னையர் தினத்தை மிக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். நாம் கொண்டாடுகிற அனைத்து பண்டிகைகளும் எதோ ஒரு காரணத்தினால் தான் உருவாகி இருக்கும்.

அந்த வகையில், நாம் இந்த பதிவில் அன்னையர் தினம் எவ்வாறு உருவானது என்பது பற்றி பார்ப்போம்.

அன்னா ஜார்விஸ் என்பவர் துவக்கி வைத்தது தான் இந்த அன்னையர் தினம். அன்னா ஜார்விஸ் திருமணமாகாதவர். ஆனால், இவர் அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால், இவரை மையப்படுத்தி அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது.

சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளையாவது எல்லாரும் இணைந்து, தங்களை பெற்ற தாய்மாரை எண்ணி, அவர்கள் உயிரோடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் அவர்களை கெளரவிக்க வேண்டும் என விரும்பினார். அந்த வகையில், அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண்மணி என்ற பெருமை ஜார்விஸை தான் சேரும்.

இதனையடுத்து, இந்த நாளை உருவாக்குவதற்காக பெரும் பாடுபட்டு, அனைத்து மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், 1911-ம் ஆண்டு அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

அதனை தொடர்ந்து, அதிபர் உட்ரோ வில்சன் 1914-ம் ஆண்டு மே 8-ம் தேதி, அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அந்த அறிக்கையில் மே மாதம் இரண்டாம்  ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. இப்படி தான் இந்த அன்னையர் தினம் உருவானது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

1 hour ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

2 hours ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

2 hours ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

2 hours ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

2 hours ago