முகம் எப்பொழுதும் பொலிவுடன் இளமையாக ஜொலிக்க இதை செய்யுங்கள்..!முகத்தில் உள்ள கருமை மறைய..!

டிப்ஸ்-1

தினமும் வீட்டில் பால் வாங்குவது இயல்பு. அதனால் பாலை காய்ச்சிய பிறகு அதன் மேல் படியும் ஆடையை எடுத்து குளிர வைக்க வேண்டும். பின்னர் இதனை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதுபோல் செய்வதன் மூலமாக முகத்திற்கு நல்ல ஊட்டசத்தாக இது அமையும். இதனால் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்கும்.

டிப்ஸ்-2

கடலை மாவில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், இதில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் கலந்து வைத்துள்ள இந்த மாவை முகத்தில் தடவ வேண்டும். இதில் ஐந்து நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடத்தில் இது உலர்ந்து விடும். பின்னர் கழுவி விட வேண்டும். இதன் மூலம் முகத்தில் இருக்கும் முகப்பரு தழும்புகள், கரும்புள்ளிகள் முற்றிலும் மறைந்து விடும். மேலும் இதனால் முகச்சுருக்கமும் மாறிவிடும்.

author avatar
Castro Murugan