நீங்களும் இதையே கடைபிடியுங்கள்! அதுவே என் வேண்டுகோள் – கிரிக்கெட் வீரர் சச்சின்

நாடு முழுவதும் கொரோன வைரஸ் குறித்த பயம் பரவலாக காணப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்தியாவில், 600-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2-நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவர்கள் கூறுகையில், ‘நம் அரசாங்கமும் நிபுணர்களும் நம்மை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்துகிறார்கள். ஆனால், பலரும் துணிந்து வெளியே செல்வதை பார்க்க முடிகிறது. நானும் என் குடும்பத்தினரும் 21 நாட்களுக்கு வீட்டிலேயே இருப்போம். நீங்களும் இதை கடைபிடியுங்கள். அதுவே என் வேண்டுகோள்.’ என கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.