கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம் -திருவள்ளூர் ஆட்சியர் எச்சரிக்கை

கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம் என்று திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.அந்த வகையில் நேற்று வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.குறிப்பாக சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்  உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்தது.

இதன் விளைவாக திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில்,  திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம் .மக்கள் ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.