மேலும் 3 தேசிய பேரிடர் குழுக்கள் வருகை.. திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

red alert

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால், பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ள நிலையில், இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் இன்று இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர … Read more

திருவள்ளூரில் தனித்தீவாக மாறிய 2 கிராமங்கள்.! ஆற்று வெள்ளத்தால் வீடு திரும்ப முடியாமல் மக்கள் தவிப்பு.!

கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன. மாண்ட்ஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன. இதனால், பல்வேறு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளில் உபரிநீரை திறக்கபட்டு வருகின்றன. பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூரை அடுத்து உள்ள சுப்பாரெட்டி பாளையம், பள்ளிபுரம் கிராமத்து மக்கள் மீஞ்சூருக்கு … Read more

#JustNow: செஸ் ஒலிம்பியாட் – 4 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை!

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை  நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில், இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு … Read more

#BREAKING: செஸ் ஒலிம்பியாட்; இந்த 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை – தமிழக அரசு

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா … Read more

#Live:சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரெட் அலெர்ட் நீக்கம்

சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட்  விலக்கிக்கொள்ளப்பட்டு ஆரஞ்சு அலெர்ட்டாக மாறுகிறது என்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சென்னையிலிருந்து  தென்-தென்கிழக்கே சுமார் 150 கி.மீ தொலைவிலிருந்து 18 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும். இது வடக்கு தமிழகம் & அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைகளை புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே நவம்பர் 19 … Read more

#Breaking:கனமழை எதிரொலி – தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு!

திருவள்ளூர் ,செங்கல்பட்டு,மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில்,கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள்,சாலைகள்,கடைகளுக்குள்  மழைநீர் வெள்ளம்போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து உள்ளன.இதனால்,பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் ,செங்கல்பட்டு,மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்திலிருந்து மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். அதன்படி, செங்கல்பட்டு,திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா 1 … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு.!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அங்காளம்மன் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியின் அங்காளம்மன் குளத்தில் சுமதி (38) ஜீவிதா (14) அஸ்திதா (14) சுகந்தி (38) ஜோதி (10) ஆகிய 5 பெரும் துணிதுவைக்க குளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது துணி துவைக்கும் போது தண்ணீரில் ஒருவர் முழ்கியுள்ளார். மூழ்கியவரை காப்பாற்ற சென்ற போது ஒன்றன்பின் ஒன்றாக நீரில் மூழ்கி 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

காவி உடையில் திருவள்ளுவர் – சர்ச்சையை ஏற்படுத்திய கல்வி தொலைக்காட்சி

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர் உருவம் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அரசு பள்ளி மாணவர்கள் பாடங்களை கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சி அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.குறிப்பாக  ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்வித் தொலைக்காட்சியில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாட ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர் உருவம் காவி உடையில் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.இது … Read more

அட வெங்காயத்திற்கு வந்த வாழ்வா? புதுமணத்தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள்!

புதுமணத்தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள். பருவமழை காரணமாக, வெங்காயத்தின் வரத்து குறைந்த நிலையில், வெங்காயவிலை வானை முட்டும் அளவுக்கு கிடுகிடு என உயர தொடங்கியது. இதனால், இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்களுக்கு வெங்காயம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ வெங்காயத்தை பூ செண்டு போல் அலங்கரித்து, மணப்பெண்ணின் தோழிகள் மணமக்களுக்கு பரிசாக அளித்துள்ளனர்.

பரபரப்பு.! வாக்குப்பெட்டி தீ வைத்து எரிப்பு.!

இன்று காலை 7 மணி முதல் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து வந்து மர்ம நபர்கள் தீ வைத்தனர். தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.அதன்படி முதற்கட்டமாக  இன்று காலை 7மணி முதல்  வாக்குபதிவு தொடங்கியது. இன்று … Read more