எதையும் விளம்பரத்திற்காக பண்ண வேண்டாம் : நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியுள்ளார். அப்போது அவர், எடுக்கும் முயற்சிகள் தவறலாம். ஆனால் விடா முயற்சியை தவற வீடாக கூடாது என்றும், நான் நிஜ வாழ்வில் நான் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எதையும் விளம்பரத்திற்காக பண்ண வேண்டாம். எங்கு பேச வேண்டுமோ அங்கு மட்டும் பேசினால் போதும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.