திமுக பொருளாளர் துரைமுருகனை விமர்சித்த முதல்வர்.!

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது கொரோனா தொடர்பான விவாதத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  தமிழகத்தில் திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றும் வயதானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பதால் துரைமுருகன் அச்சப்படுகிறார் என முதலமைச்சர் விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய முதல்வர், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கூறினார். இதற்கு பதில் கூறிய திமுக பொருளாளர் துரைமுருகன்,நாளை முதல் முக கவசம் அணிந்து தான் சட்டப்பேரவைக்கு வருவோம் என தெரிவித்தார். பின்னர் சட்டப்பேரவைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சபாநாயகர் தனபால் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்