வெற்றியை மாற்றி அறிவித்ததாக புகார்- திமுக ,காங்கிரஸ் போராட்டம்

  • தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை  முதல் நடைபெற்று வருகிறது.
  • வாக்கு எண்ணும் மையத்தில் திமுக  எம்எல்ஏ செந்தில்பாலாஜி,காங்கிரஸ்  எம்.பி.ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சிகளுக்கு தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி வாக்கு எண்ணும் மையத்தில் திமுக  எம்எல்ஏ செந்தில்பாலாஜி,காங்கிரஸ்  எம்.பி.ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுடன் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.க.பரமத்தி 16வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பதில் அதிமுக வேட்பாளர் வெற்றி என அறிவித்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.