ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போல திமுகவினர் மக்களை அடைத்து வைத்து அடிமைகள் போல நடத்துகிறார்கள். – தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக , நாம் தமிழர் என பிரதான கட்சி தலைவர்கள் இந்த தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் : நேற்று தேமுதிக வேட்பாளர் ஆனந்த் என்பவரை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், வாக்காளர்க்ளுக்கு பெரிய கட்சியினர் பணம் கொடுக்கிறார்கள், பரிசு பொருட்கள் கொடுக்கிறார்கள். ஆனால் தேர்தல் அதிகாரிகள் அதன் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என விமர்சனம் செய்துள்ளார்.
ஆடு – மாடுகள் : அவர் கூறுகையில் , ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போல திமுகவினர் மக்களை அடைத்து வைத்து அடிமைகள் போல நடத்துகிறார்கள். என குற்றம் சாட்டினார். அடுத்து திமுக, அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். எனவும் அதனை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் எனவும் தனது பிரச்சரத்தில் குற்றம் சாட்டினார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.