ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி திமுக பயப்படுகிறது.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!

ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் கொள்கையை பார்த்து திமுக அச்சப்படுகிறது. – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம். 

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி இந்திய சட்ட ஆணையம் பிரதான கட்சிகளிடம் கருத்து கேட்டு இருந்தது. இதற்கு பதில் அளிக்க ஜனவரி 16 கடைசி தேதியாகும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக ஆதரவு அளித்தது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் கொள்கையை பார்த்து திமுக அச்சப்படுகிறது என விமர்சித்தார்.

மேலும், மக்கள் அனைவரும் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை ஆதரிப்பார்கள் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment