தேசிய குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, ஜே.என்.யு மாணவர்கள் மீது தாக்குதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். இதில் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் அனைத்து எதிர்கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, பகுஜன் சமாஜ் ஆகிய காட்சிகள் கலந்துகொள்வதில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக சரத்பவார் கலந்துகொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய கூட்டணி கட்சியான திமுக இதில் கலந்துகொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இதுவரை காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பெரும்பாலும் திமுக கலந்துகொண்டுள்ளது. அப்படி இருக்க இந்த கூட்டத்தை புறக்கணித்தது ஏன் என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே ஏற்பட்ட சிறிய மனக்கசப்பு விஷயங்களே இந்த காங்கிரஸ் கூட்டத்தில் திமுக பங்கேற்காததற்கு கரணம் என சிலர் கூறி வருகின்றனர்.
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…