திமுக – அதிமுக நடத்திய ஒரே விழா.. அதே மாணவர்கள்.. ஆனால் இரண்டு முறை.! குழப்பத்தில் மக்கள்….

பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலை பள்ளியில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.  

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் பனையம்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

ஆனால், அதில் தான் குழப்பமே நடந்தது. அதாவது முதலில் ஆளும் திமுக சார்பில் ஆளுகட்சி பெயரில் அப்பகுதி திமுக ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் முதலில் 99 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அடுத்ததாக, பவானிசாகர் சட்டமன்ற தொகுதி மற்றும் பனையம்பள்ளி ஊராட்சியும் அதிமுக கைவசம் உள்ளதால், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் மீண்டும் அதே நிகழ்ச்சி நடைபெற்றது. மீண்டும் அதே 99 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக மாணவ மாணவிகள் 4 மணிநேரம் காத்திருந்தனர். ஒரே நிகழ்ச்சி, இரு பிரதான கட்சிகளால் நடத்தப்பட்டதால், அங்கு ஒரே குழப்பம் நிலவி வந்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment