மீளவே முடியாத மண முறிவு என்ற அடிப்படையில் 6 மாதம் அவகாசம் வழங்காமல் விவாகரத்து வழங்க முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
ஆறு மாதம் அவகாசம் தாராமலேயே ஒரு ஜோடியின் திருமணத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி 6 மாதம் அவகாசம் வழங்காமலேயே திருமணத்தை ரத்து செய்ய, அதாவது விவாகரத்து வழங்க முடியும் என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
விவாகரத்து தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய ஆறு மாதங்கள் கட்டாய காத்திருப்பு காலத்தை, தேவைக்கு உட்பட்டு ரத்து செய்யலாம் என்றும் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.