மாலைகளுக்கு இடம் தரக்கூடாது! – பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை

மாலை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கு பாமக நிர்வாகிகள் எவரும் இடம் தரக்கூடாது  என ராமதாஸ் எச்சரிக்கை.

இதுதொடர்பாக அவரது பதிவில், பாட்டாளி மக்கள் கட்சி நிகழ்ச்சிகளில் மாலைகளுக்கு இடம் கிடையாது. மாலை அணிவிக்கும் கலாச்சாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டது. அந்தக் கலாச்சாரம் இப்போது சில இடங்களில் மீண்டும் துளிர்விடுவதாக அறிகிறேன். அது கூடவே கூடாது. மாலை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கு பா.ம.க. நிர்வாகிகள் எவரும் இடம் தரக்கூடாது என்று எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்