ராகுல் காந்தி தகுதி நீக்கம்..! தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்..! 

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் சிறை தண்டனையை கண்டித்தும், எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்துகிறார்கள்.

இதனையடுத்து, டெல்லி ராஜ்காட் பகுதியில் நடக்கவிருந்த காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி டெல்லி போலீசார் மறுத்துள்ளனர். மேலும் போராட்டம் நடக்கவிருந்த ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை, வாணியம்பாடி, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே டெல்லி போலீசார் அனுமதி மறுத்த நிலையில் ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment