கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறு! 5 குழந்தைகளை ஆற்றில் வீசி தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த மனைவி!

கணவன் – மனைவி தகராறில் 5 குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய். தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி. 

உத்திரபிரதேசம் மாநிலம், பாதோகி மாவட்டம்,  ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்தவர், மிருதுல் யாதவ். இவருடைய மனைவி முஞ்சி யாதவ்.  இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, சங்கர், மாதேஸ்வரி மற்றும் கேசவ் என மூன்று பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே கடந்த ஒரு வருடமாக குடும்ப தகராறு இருந்து வந்த  நிலையில், நேற்று முன்தினம் இரவும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த முஞ்சி தனது குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார்.

அதன்படி குழந்தைகள் ஐந்து பேரையும் வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றதும், அந்த பகுதியில் ஓடும் கங்கை ஆற்றில்  ஒவ்வொரு குழந்தையாக தூக்கி வீசினார். தந்தையுடன் ஏற்பட்ட சண்டையால் தங்களை எங்கேயோ பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார் என்று எண்ணி உடன் சென்ற குழந்தைகள், ஆற்றில் தூக்கி வீசும் போது பயத்தில் அலறி உள்ளனர்.

இதனையடுத்து, முஞ்சி தன் மனதை கல்லாக்கிக் கொண்டு ஐந்து குழந்தைகளையும்  ஆற்றில் தூக்கி வீசினார். இதனையடுத்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு ஆற்றில் குதித்தார். ஆனால் உள்ளே குதித்து தத்தளித்த போது ஏற்பட்ட அச்சத்தால், அவர் நீந்தி கரையை வந்தடைந்த பின்னர் விடியும் வரை அங்கேயே  தங்கியிருந்தார்.

இன்று அதிகாலையில் நடந்த சம்பவம் பற்றி, அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முஞ்சு குழந்தைகளை ஆற்றில் வீசிய இடம் மிகவும் ஆழமான பகுதி என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

1 hour ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

2 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

2 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

2 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

3 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

3 hours ago