கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இயக்குனர் பாரதிராஜா..!!

இயக்குனர் பாரதிராஜா முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான  பாரதிராஜா இன்று தனது இல்லத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.