சூர்யா – அதர்வா – ஆர்யா – ராணா என பிரம்மாண்ட கூட்டணியுடன் களமிறங்கும் இயக்குனர் பாலா!

விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா எனும் திரைப்படத்தை இயக்கினார் பாலா. ஆனால் அந்த பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் படம் ட்ராப் ஆனது. அதனை, அடுத்து இயக்குனர் பாலா உடனடியாக ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் அதற்கான கதை மற்ற வேலைகள் என படம் தொடங்க தாமதம் ஆனது.

பின்னர், ஆர்யா மற்றும் அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்குனர் பாலா இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. அதனை அடுத்தும் சூர்யாவின் கதை கூறினார் பாலா. சூர்யாவின்  கால்ஷீட் கிடைத்து உள்ளது ஆதலால் சூர்யா – பாலா கூட்டணி உருவாகும் என தகவல்கள் வெளியாகின.

தற்போது இந்த அனைத்து செய்திகளும் உண்மையாகி  உள்ளன. அதாவது, நடிகர் சூர்யா, ஆர்யா, அதர்வா, ராணா இந்த நால்வரையும் வைத்து இயக்குனர் பாலா ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தில் பிந்து மாதவி ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். மேலும், மற்ற நடிகர் நடிகைகள் விவரம் சூட்டிங் எப்போது தொடங்கும் என மற்ற விபரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக இயக்குனர் பாலா திரைப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.