அரசுப் பணிகளில் நேரடி நியமன வயது 32-ஆக உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணிநியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பை 2 ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13ம் தேதி நடைபெற்ற 2021-22-ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால், நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என அமைச்சர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 30ல் லிருந்து 32 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணை அடிப்படை பணி நியமனத்தில் தற்போது நடைமுறையிலுள்ள வயது உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்றும் பட்டிலினத்தவர், மாற்று திறனாளி உள்ளிட்டோருக்கு சட்டப்படி வயது உச்ச வரம்பு நீட்டிப்பு, தளர்வு தொடரும் எனவும் கூறியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்