AAAவை நினைத்து டப்பிங் பேச மறுத்துவிட்டாரா விக்ரம்.!? முழுப்படத்தையும் முடிங்க அப்புறம் பாத்துக்கலாம்.!

துருவ நட்சத்திரம் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கிய பிறகு முழுவதுமாக டப்பிங் பேசி விடுகிறேன் என விக்ரம் கூறிவிட்டாராம்.

விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் துருவ நட்சத்திரம் என அறிவிக்கப்பட்டதும் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக அது மாறியது. மேலும், அந்த படத்தின் ஸ்டைலான டீசரை கண்டு ரசிகர்கள் மெய் சிலிர்த்து போனார்கள். அந்த அளவுக்கு விக்ரம் ஸ்டைலாக கேசுவல் லுக்கில் இருந்தார்.

ஆனால், அந்த டீசர் வந்தே வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்னும் படம் முடிந்த பாடில்லை. இந்த படம் இப்போதான் முடிவடையும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த வேளையில் விரைவில் பட ஷூட்டிங் ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. கௌதம் மேனன் தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.

துருவ நட்சத்திரம் எடுத்த வரையில் எடிட் செய்து விக்ரமிடம் காண்பிக்கப்பட்டதாம். அது விக்ரமுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். மீதி ஷூட்டிங் எப்போ என்று கூறுங்கள் கால்ஷீட் தருகிறேன் என கூறினாராம். ஆனால், படக்குழு எடிட் செய்த வரைக்கும் டப்பிங் பேசி முடித்து தந்துவிடுங்கள் மீத ஷூட்டிங்கை உடனே ஆரம்பிக்கலாம் என கூற விக்ரம் தரப்பு பின்வாங்கி விட்டதாம்.

காரணம் என்னவென்றால், இதே போல தான் சிம்புவின் AAA திரைப்படம் ஷூட்டிங் முழுதாக முடிக்காமல், சிம்பு டப்பிங் பேசி முடித்து, அதனை எடிட் செய்து ஒரு முழு படம் போலவே அல்லாமல் படத்தை முடித்து வெளியிட்டனர். அது வெளியாகி படுதோல்வி அடைந்தது.

தற்போது அதே நிலைமை துருவ நட்சத்திரத்திற்கு வர வேண்டாம் என நினைத்தார் போலும் விக்ரம். அதனால், கிளைமேக்ஸ் காட்சிகளை ஷூட் செய்த பிறகு மொத்தமாக டப்பிங் பேசிவிடுகிறேன் என கூறிவிட்டாராம் விக்ரம். விக்ரம் விவரமான ஆளுதான்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.