சென்னை மாநகராட்சிக்கு என் 95 முகக்கவசங்களை வழங்கிய சென்னை அணியின் துணை நிறுவனர் தோனி.!

சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணமாக, சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு என் 95 ரக முகக்கவசங்களை சென்னையின் எப்.சி. அணியின் துணை நிறுவனர் தோனி நன்கொடையாக வழங்கினார். 

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்து, கால்பந்தில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் ஆண்டுத்தாவரது நடைபெறும். இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இரண்டு முறை ஐ.எஸ்.எல் பட்டத்தை வென்றது, சென்னையின் எப்.சி. அணி. இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் தொழிலதிபர் வீடா டானி ஆகியோர் இந்த கால்பந்து கிளப்பை நிறுவி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், அங்கு ஒரே நாளில் சாரிசாரியாக ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக, சென்னையின் எப்.சி. அணியின் துணை நிறுவனர் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனி சார்பில், ஜூன் மாதம், 17 ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு என் 95 ரக முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கினார்.