கொரோனா காலத்தில் நடைபெறும் மாநிலங்களவை தேர்தல் ! மாலை வெளியாகிறது முடிவு.!

இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி மார்ச் மாதம் 10 மாநிலங்களில் 36 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 

மீதமுள்ள 19 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது.குஜராத் மற்றும் ஆந்திராவிலிருந்து  தலா 4 இடங்கள்,ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து  தலா 3 இடங்கள்,ஜார்கண்டிலிருந்து 2 இடங்களும், மணிப்பூர் ,மிசோரம் மற்றும் மேகாலயாவிலிருந்து தலா ஒரு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.  

காலை 9 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 4 மணிக்கு முடிவடைகிறது. இதற்கான முடிவுகள் மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. கொரோனா பரவி இந்த காலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.எனவே இதற்காக போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.முகக்கவசம்  அணிந்தும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றியும் வாக்களித்து வருகின்றனர்.

author avatar
murugan