விருது விழாவில் தனது விவாகரத்தை பற்றி பேசிய டிடி…!

  • சமீபத்தில் நடந்த கலாட்டா நட்சத்திர விருது விழாவில் பேசிய திவ்யதர்ஷினி பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , தனது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை பேசினார்.
  • அப்போதுநம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் கல்யாணமான உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம்என கூறினார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. டிடி தனது நண்பரான ஸ்ரீகாந்தை  கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் இருவரும் இடையில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக  விவாகத்து பெற்று விட்டார்.

இந்நிலையில் கலாட்டா நட்சத்திர விருது விழாவில் சிறந்த தொகுப்பாளினிக்காக டிடி-க்கு விருது கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய டிடி , பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , தனது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை பேசினார்.

அதில் இன்றைய பெண்களுக்கு தான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் வாழ்வில் நம்மைக் குறித்து யார் என்ன சொன்னாலும், வாழ்க்கையில் என்ன நடந்தாலும் கவலை கொள்ளாமல் வெற்றியை மட்டுமே நோக்கிச் செல்ல வேண்டும்.

எனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள் உங்களுக்குத் தெரியும். நம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் கல்யாணமான உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம்.

ஆனால் நாம் வழக்கமாக காலையில் எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டு வேலைக்குச் சென்றால் நமது அடையாளத்தினை யாராலும் அளிக்க முடியாது என கூறினார்.

author avatar
murugan