10ஆம் வகுப்பு மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லை! ஆசிரியர்களை வெளுத்து வாங்கிய ஊர் மக்கள்!

  • தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு 2 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 
  • தகவல் அறிந்து ஊர் மக்கள் திரண்டு ஆசிரியர்களை தாக்கியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் எனும் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர்களாக லட்சுமணன் மற்றும் சின்னமுத்து ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு இந்த இரண்டு ஆசிரியர்களும் தொடர்ந்து செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை வீட்டில் சொன்னால் மதிப்பெண் குறைந்து விடுவதாக கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஒருநாள் அந்த ஆசிரியர்கள், மாணவியிடம் எல்லை மீற முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளர்.

தகவல் அறிந்து ஊர் மக்களுடன் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியருடன் பெற்றோர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த ஆசிரியர்கள் மது போதையில் இருந்துள்ளனர். பின்னர் தலைமை ஆசிரியரிடம் இச்சம்பவம் குறித்தும் பலனளிக்காத காரணத்தால், இரண்டு ஆசிரியர்களையும் ஊர் மக்கள் தாக்கியுள்ளனர். தகவலறிந்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்து அவர்களிடம் உள்ள செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மாணவி பென்னகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், விசாரணைக்காக மாணவி அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டு ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்து கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.