மும்பை : தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் பாதிப்பு, 4 பேர் உயரிழப்பு !

மும்பை,தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் பாதிப்பு, 4 பேர் உயரிழப்பு !

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 29974 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 937 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7027   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்தியவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 8590 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 369 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் கொரோனா தாக்கம் பெருமளவில் உள்ளது.

இந்நிலையில் மும்பையில் உள்ள தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4 பேர் உயரிழந்துள்ளனர். இதனால் தாராவியில் மட்டும் தொற்று பாதிப்பு 330 உயர்ந்துள்ள நிலையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

author avatar
Vidhusan