தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து – இயக்குனர் ஆர்.ஜி.வி கருத்து …!

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பாக இயக்குனர் ஆர்.ஜி.வி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் தனுஷ் அவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமாகிய  ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்றிரவு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திரையுலக வட்டாரத்தில் ஏற்படக்கூடிய விவாகரத்து தொடர்பான சர்ச்சை பேச்சுகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா அவர்கள் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பிரபலங்களின் விவாகரத்து இன்றைய கால இளைஞர்களுக்கு திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை எடுத்துக் கூறுகிறது என கூறியுள்ளார். மேலும் திருமணத்தை விட வேகமான காதல் கொலைகள் எதுவும் கிடையாது.

சந்தோசத்தின் ரகசியம் இருக்கும் வரை காதலித்துவிட்டு, திருமணம் என்னும் சிறைக்குள் செல்லாமல் இருப்பது தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காதல் திருமணங்கள் 3 முதல் 5 நாட்கள் வரை தான் கொண்டாட கூடியது எனவும், விவாகரத்து கொண்டாடப்பட வேண்டியது தான். ஏனென்றால் விடுதலை கொடுக்கிறது. நமது முன்னோர்களால் திணிக்கப்பட்ட மிகவும் தீய பழக்கம் திருமணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal