பிரதமர் மோடியை சந்தித்த அனில் பைஜால்..!

டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று  பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர்.  இந்த சந்திப்பின் போது டெல்லி வன்முறை குறித்து பேசியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அனில் பைஜால்,  “நான் பிரதமரை சந்தித்தேன் “என மட்டும் கூறினார். இவர்கள் சந்திப்பின் எதை  பற்றி பேசினார்கள் என்பதை பற்றி அவர் கூறவில்லை .

டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இருபிரிவினர் இடையே நடந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறியது. இந்த சம்பவத்தால் வன்முறையால் 46பேர் இறந்துள்ளனர்.

200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.பாதிக்கப்பட்ட இடங்களை டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
murugan