வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும்.

நேற்று வங்கக்கடலில் அந்தமான் அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மன்னர் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 -50 கிலோ மீட்டர்களுக்கு வீசக்கூடும் என்பதால் இரு பகுதிகளுக்கும் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
murugan