டெல்லி வன்முறை : இணையதள சேவை துண்டிப்பு நீட்டிப்பு…!

இன்று இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கு, காசிப்பூர் மற்றும் திகிரி அவற்றின் அருகில் உள்ள எல்லைப் பகுதிகளில் இணைய சேவை ஜனவரி 31ஆம் தேதி இரவு 11 மணிவரை துண்டிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று இரவு 11 மணி வரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நலன் கருதி இணைய சேவை நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.