கொரோனா முடிவு வருவதற்கு முன்பே உயிரிழந்த டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள்.!

டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக 31 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு. 

டெல்லியில் வடமேற்கு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 31 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் நேற்று கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்று காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

ஆனால், பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பாகவே சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். பின்னர் அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் இருந்த அனைவரையும் தாங்களாகவே தனிமைப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் அவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே டெல்லியில் கொரோனா வைரசால் இதுவரை 5104 பேர் பாதிக்கப்பட்டு, 64 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்