பிளாஸ்மா சிகிச்சைக்குப்பின் டெல்லி அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம்

பிளாஸ்மா சிகிச்சைக்குப்பின் டெல்லி அமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு அதிக காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறு  காரணமாக ராஜிவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .பிளாஸ்மா சிகிச்சைக்குப்பின் அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.