டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் பொது வார்டுக்கு மாற்றம்! மருத்துவமனை வட்டாரம் தகவல்!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் பொது வார்டுக்கு மாற்றம்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தற்போது, இந்த கொரோனா வைரஸால் பல தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிரா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு பிலாசமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திங்கள்கிழமைக்குள் பொது வார்டுக்கு மாற்றப்படலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.